ரயிலில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் ரயில் நிலையத்தில் ஜூலை 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் எண் 4-இல் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. 50 வயது முதியவர் ஒருவர் ரயில் மீது ஏறி தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயில்வே மின் கம்பிகளில் கைபட்டு மின்சாரம் தாக்கியது. அந்த நபர் கண்ணிமைக்கும் நொடியில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இறந்தவரின் விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :