ராஜஸ்தானில் இனிப்புகளை பரிமாறி கொண்ட இந்தியா - பாக்., வீரர்கள்

by Editor / 24-07-2021 04:55:04pm
 ராஜஸ்தானில் இனிப்புகளை பரிமாறி கொண்ட இந்தியா - பாக்., வீரர்கள்


 பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.ராஜஸ்தானில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள பர்மார் பகுதியில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்களும் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து, இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.

அதேபோல், இந்திய வங்கதேச எல்லையில் உள்ள புல்பாரி பகுதியில், இந்திய எல்லை பாதுகாப்பு படையின் 51வது பட்டாலியன் வீரர்களும். வங்கதேச எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.

 

Tags :

Share via