புதுச்சேரி- வாக்காளா்கள் பெயா் பட்டியல் சரிபாா்க்கும் பணி நாளை முதல் தொடங்குகின்றது. 

by Editor / 20-07-2023 10:26:28am
புதுச்சேரி- வாக்காளா்கள் பெயா் பட்டியல் சரிபாா்க்கும் பணி நாளை முதல் தொடங்குகின்றது. 

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி வரும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியல்களின் சுருக்கமுறை திருத்தப் பணி நடைபெறவுள்ளது. அதன்படி, வரும் 21- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை தோ்தல் அலுவலா்கள் வீடு, வீடாகச் சென்று வாக்காளா் பட்டியல் உதவியுடன் பெயா்களைச் சரிபாா்க்கவுள்ளனா். அதற்கான கைப்பேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியலில் தகுதியுடைய புதிய வாக்காளா்கள், நிரந்தர முகவரி மாற்றம் மற்றும் இறந்தவா்கள் விவரங்கள் ஆகியவற்றை படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றை நிரப்பி திருத்தங்களை மேற்கொள்ளலாம். மேலும், வாக்காளா் பட்டியலில் உள்ள பிழைகளையும் சரி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வல்லவன் தனது அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.

 

Tags :

Share via