பஞ்சமி நிலங்களின் விவரங்கள்: விசிக எம்.பி.ரவிக்குமார் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட பஞ்சமி நிலங்களின் விவரங்களை அரசு அமைத்த உயர்நிலைக்குழு வெளியிட வேண்டும் என விழுப்புரம் விசிக எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கையில், தமிழ்நாடு அரசு அமைத்த உயர்நிலைக்குழு, எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு பஞ்சமி நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிடவேண்டும். அந்த நிலங்களைக் கையகப்படுத்தி, தகுதியானவர்களுக்கு பிரித்துக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags :