டீ கடைக்குள் கண்டெய்னர் லாரி புகுந்தது3 பேர் சம்பவ இடத்திலேயேபலி.

by Editor / 20-07-2023 05:07:16pm
டீ கடைக்குள் கண்டெய்னர் லாரி புகுந்தது3 பேர் சம்பவ இடத்திலேயேபலி.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சூரியநல்லூரில் டீ கடைக்குள் கண்டெய்னர் லாரி புகுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7.30 மணி அளவில் கரூரில் இருந்து சிமெண்ட் கலவை லோடு ஏற்றிய லாரி ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த முத்துச்சாமி, சுப்பிரமணி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via