நெல்லை கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

by Editor / 21-07-2021 07:10:56pm
 நெல்லை  கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

நெல்லை  மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு தாழையூத்து பகுதியைச் சேர்ந்த கண்ணன்(33) என்பவர் கடந்த 12.7.2021 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்யும்படி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மணிவண்ணன் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் நான்கு நபர்களை கடந்த 15.07.2021 அன்று கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் எதிரியான கட்டுடையார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் இசக்கிமுத்து என்ற மொங்கான்(29), என்பவர் 17.07.2021 அன்று கைது செய்யப்பட்டார்.

 மேலும் இவ்வழக்கின் எதிரிகளான வாகைகுளத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன்(25), மற்றும் சதீஷ் ராஜா (21) ,ஆகிய இருவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இவ்வழக்கில் இதுவரை மொத்தம் ஏழு எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via