பெண்களின் வசதிக்காக விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் 

by Editor / 24-07-2023 04:30:14pm
பெண்களின் வசதிக்காக விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் 

தருமபுரி மாவட்டம் தொப்பூரில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை பயனாளிகளின் விவரங்களை பதிவேற்றும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், 'தமிழ்நாட்டு பெண்கள் தன்னம்பிக்கையோடும், சுய மரியாதை உணர்வுடனும் வாழவே மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் குடும்ப அட்டைக்காக ஒதுக்கப்பட்ட தேதியில் வந்தால் போதும். இந்த முகாம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நடைபெறும்' என்று கூறினார்.

 

Tags :

Share via