குற்றாலத்தில் சென்னையில் வசிப்பவரை கூட்டிவந்து கொடூர கொலை.

by Editor / 28-07-2023 10:38:59pm
குற்றாலத்தில் சென்னையில் வசிப்பவரை கூட்டிவந்து கொடூர கொலை.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குறிஞ்சி என்கின்ற தங்கும் விடுதியில் 27 ஆம் தேதி பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த நாராயணகுமார், தாழையூத்தைச் சார்ந்த செல்வம், தங்கமுத்து, மூலக்கரை பட்டியை சொந்த ஊராகக் கொண்டு சென்னை சிட்லாப்பாக்கம்  பகுதியில் சித்த மருத்துவ மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து வியபாரம் செய்து வரும்  முருகேசன் ஆகிய நான்கு பேர் ரூம் எடுத்து தங்கி குற்றாலத்தில் குளித்துள்ளனர். இந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் விடுதியை காலி செய்ய இருந்ததாக கூறப்படுகிறது . இந்த நிலையில் நான்கு  நண்பர்களில் நாராயணகுமாரும் தங்கம் முத்துவும் வெளியே சென்று சாப்பிட சென்றதாக கூறப்படுகிறது அப்பொழுது அறையில் முருகேசன் மட்டுமே  இருந்ததாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் சாப்பிட சென்ற இரண்டு நபர்களும் அறைக்கு வந்து பார்த்தபொழுது ரத்த வெள்ளத்தில் முருகேசன் வெட்டுப்பட்டு இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர் இதன் தொடர்ச்சியாக விரைந்து வந்த போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர் இந்த நிலையில் இவர்களுடன் வந்து தங்கி இருந்த செல்வம் என்பவரை காணவில்லை இந்த கொலையை செல்வம் தான் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது இதில் இதில் கொலையுண்டு இறந்து போன முருகேசனும், நாராயணகுமாரும் ஒரு பிரிவைச் சார்ந்தவர்கள் என்றும் செல்வமும் தங்க மட்டும் ஒரு பிரிவை சார்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது மேலும் நாராயணகுமார் தங்கமுத்து செல்வம் ஆகியோர் நண்பர்கள் என்றும் முருகேசன், நாராயணக்குமார் ஆகியோர் நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது இதில் நாராயணகுமார் மூலம் திட்டமிட்டு முருகேசன் குற்றாலத்திற்கு அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது இதன் காரணமாக நாராயணகுமார் தங்கமுத்து ஆகிய இரண்டு நபர்களையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர் மேலும் இவர்களோடு தங்கி இருந்த செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த கொலை ஜாதிய ரீதியாக நடந்ததாக கூறப்படுகிறது குற்றாலம் போலீசாரின் மெத்தனத்தால் குற்றாலத்தில் தொடர்ந்து பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

குற்றாலத்தில் சென்னையில் வசிப்பவரை கூட்டிவந்து கொடூர கொலை.
 

Tags :

Share via