டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு வெட்டு.காவல்துறை விசாரணை.

by Editor / 02-08-2023 08:35:51am
டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு வெட்டு.காவல்துறை விசாரணை.

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அடுத்த வன்னி கோனந்தல் பகுதியில் டாஸ்மாக் கடை ஓன்று செயல்பட்டுவரவுகிறது.இந்த டாஸ்மாக்  கடைக்கு நேற்று இரவு  ஆறு பேர் கொண்ட மர்மகும்பல் ஓன்று டாஸ்மாக் ஊழியர்கள்  கடையை  அடைக்கும் நேரத்தில் அங்குசென்று மதுப்பானம்  கேட்டு தகராறில் ஈடுபட்டு கடுமையாக பணியாளர்களை தாக்கியும் அரிவாளால் வெட்டியதில்  டாஸ்மாக் கடை ஊழியர்களான பாலமுருகன்,பால்துரை ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில் உடனடியாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.இந்த சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தேவர்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் டாஸ்மாக் கடையிலுள்ள சி.சி.டி.வி காமிராவில்,அந்தபகுதிகளிலுள்ள சி.சி.டி.வி காமிரா பதிவு காட்சிகளையும் ஆய்வு செய்துவருகின்றனர்.இந்தக்குமப்பால் பணத்தை கொள்ளையடிக்கவந்ததா..இல்லை..மதுப்பணத்தை அள்ளிச்செல்லவந்ததா..உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையைமுடுக்கிவிட்டுள்ளனர்.

 

Tags :

Share via