இந்தியாவை கொன்றுவிட்டீர்கள் - ராகுல் காந்தி
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 2வது நாள் விவாதம் இன்று நடைபெறுகிறது. அதன்படி, இன்று நண்பகல் 12 மணியளவில் தொடங்கிய மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் பேசிய ராகுல் காந்தி எம்.பி, “இந்தியா என்ற சித்தாந்தத்தையே அரசு கொன்றிருப்பது மணிப்பூர் சம்பவம் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. நீங்கள் தேச பக்தர்கள் அல்ல தேச துரோகிகள் பாரதத் தாயை மணிப்பூரில் கொன்று விட்டீர்கள். அமைச்சர் அமித்ஷா, அதானி பேச்சை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.
Tags :