’என் கணவர் அப்பாவி: ஷில்பா ஷெட்டி

by Editor / 24-07-2021 04:56:40pm
  ’என் கணவர் அப்பாவி: ஷில்பா ஷெட்டி

 பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி  தமிழில்குஷிபடத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். பிரபுதேவாவுடன்மிஸ்டர் ரோமியோஎன்ற படத்திலும் நடித்திருந்தார். இவர் கடந்த 2009-ம் ஆண்டில் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஆபாசப் படங்களை தயாரித்து விற்றது தொடர்பாக கைது செய்யப்பட்டார். ஆபாசப் படங்களை தயாரித்து விற்பனை செய்தது, அதற்காக ஷாட்ஷாட் என்ற செயலியை உருவாக்கியதில் இவருக்கு  தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனை அறிந்த மும்பை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் சில நடிகைகளை  மிரட்டி அந்தப் படங்களில் நடிக்க வைத்ததாக புகார் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து  போலீசார்  நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் விசாரணை நடத்தி அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொண்டனர்.

இந்நிலையில் அந்த ஆப் தொடர்பான விஷயங்களை ராஜ் குந்த்ராவின் மைத்துனர் பிரதீப் பக்ஷிதான் கவனித்துக் கொண்டார் என்றும் இதற்கும் இவருக்கும் தொடர்பில்லை, அவர் அப்பாவி என்றும் ஷில்பா தெரிவித்துள்ளார்அதோடு கிளர்ச்சியூட்டக் கூடிய படங்களுக்கும் (erotica) ஆபாசப் படங்களுக்கும் (pornography) வித்தியாசம் இருக்கிறது என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக .என். செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதுபோன்ற வீடியோக்கள், ஒடிடி தளங்களில் அதிகம் காணப்படுவதாகவும், இந்த ஹாட்ஷாட் ஆப், ஆபாச வீடியோக்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாதுதான் இது போன்ற ஆபாச வீடியோ தயாரிப்புகளில் ஈடுபடவில்லை என்றும் அவர் போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

Tags :

Share via