தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுவதால் தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யவே 70 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 53 டிஎம்சி மட்டுமே நீர் உள்ளதால் தமிழகத்திற்கு நீர் திறந்து விடக்கூடிய சூழல் இல்லை, மழை பற்றாக்குறையால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலையில் உள்ளோம் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Tags :