முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு நீதிபதி பூரண ஜெய ஆனந்த் ஒத்தி வைத்தார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜரான நிலையில் வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார். கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ-வாக உள்ளார். இந்த நிலையில், விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு இயக்குநரகம் சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது.
Tags :