விவசாயிகளின் போராட்டத்தை போலீசை ஏவி ஒடுக்காதீர் - ஜான்பாண்டியன்

by Staff / 26-09-2023 12:31:41pm
விவசாயிகளின் போராட்டத்தை போலீசை ஏவி ஒடுக்காதீர் - ஜான்பாண்டியன்

விவசாயிகளின் போராட்டத்தை காவல் துறையை கொண்டு ஒடுக்க நினைக்கும் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று தமமுக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்குரிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நேற்றைய தினம் சென்னையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனை காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் திமுக அரசு செயல்பட வேண்டும். மாறாக காவல்துறையை கொண்டு அடக்குமுறையின் மூலம் ஒடுக்க நினைக்கும் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via