ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத் துறை விசாரணை

by Staff / 08-10-2023 01:50:09pm
ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத் துறை விசாரணை

 திமுக எம். பி. ஜெகத்ரட்சகன் மீதான வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, வருமானவரித் துறை அதிகாரிகள் 3-வது நாளாக சோதனை நடத்தினர். அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம். பி. யுமான ஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு புகார் சென்றது . கடந்த 5-ம் தேதிமுதல்வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள்  ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை,, புதுச்சேரி திருவள்ளூர்,காஞ்சிபுரம்,, திருப்பூர்என  50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.. ஒருசில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், மற்ற இடங்களில் 3-வது நாளாக நேற்றும் சோதனை நீடித்தது. 3 நாட்களாக, ஷிப்ட் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை,தொடர்பாக, ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

 

Tags :

Share via