கன்டெய்னரில் கடத்திய கசகசா பறிமுதல்

by Staff / 13-10-2023 01:45:50pm
கன்டெய்னரில் கடத்திய கசகசா பறிமுதல்

தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏதேனும் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறதா? என்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒரு கன்டெய்னரில் கால்நடை தீவனம் (பார்லி தவிடு) இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த கன்டெய்னர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் குடோனில் சுங்கத்துறை ஆய்வுக்காக வைக்கப்பட்டு இருந்தது.

அப்போது அந்த கன்டெய்னரில் இருந்து கசகசா வெளியில் சிதறி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்த கன்டெய்னரை பாதுகாப்பாக வைத்து இருந்தனர். இந்தநிலையில் மத்திய வருவாய்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்த கன்டெய்னரை திறந்து சோதனை நடத்தினர்.

அப்போது கன்டெய்னரின் முன்பகுதியில் தவிடு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதற்கு பின்பகுதியில் சுமார் 9 டன் கசகசா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதன் மதிப்பு ரூ. 1½ கோடி என்று கூறப்படுகிறது.மேலும் கசகசாவை இறக்குமதி செய்ய தடை இல்லை. ஆனால் அதற்கு கூடுதல் வரி செலுத்த வேண்டும். ஆகையால் வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் தவிடு என்ற பெயரில் கசகசாவை பதுக்கி கடத்தி வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறதுv

 

Tags :

Share via

More stories

Logo