விபத்தில் மூவர் பலி - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
தூத்துக்குடி அருகே மூன்று பேர் கடந்த 31ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ராஜன் என்பவருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அவர் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்த மூவரில் மூளைச்சாவு அடைந்த வசந்தன் என்பவரது உடல் உறுப்புகள் நேற்று அவரது குடும்ப உறுப்பினர்களால் தானம் வழங்கப்பட்டது.
Tags :