ஃபர்னிச்சர் கடையில் நள்ளிரவில் தீ விபத்து

by Staff / 08-11-2023 03:28:37pm
 ஃபர்னிச்சர் கடையில் நள்ளிரவில் தீ விபத்து

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் நடுவிற்பட்டியை சேர்ந்த சதிஷ் குமார் என்பவர் விளாத்திகுளம் சாலையில் ஃபர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நள்ளிரவில் அவரது கடையில் தீ பற்றி எரிந்து. அதிகளவில் புகைமூட்டம் வருவதை கண்ட அருகில் இருந்தவர்கள் எட்டயபுரம் காவல் நிலையம் மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு தீயை அணைத்துள்ளனர். இருந்த போதிலும் கடையில் இருந்த கட்டில், பீரோ, மெத்தை, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், குக்கர் என சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via