அண்ணாமலை மன்றத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்..
அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 6அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், Post See new posts Conversation Udhay @Udhaystalin முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி. மு. க சார்பில் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இன்று கலந்து கொண்டோம். நம் கழகம் எப்போதும் துடிப்புடன் இயங்க காரணமாக இருக்கும் கழக நிர்வாகிகள் மற்றும் குழந்தையை சீராட்டும் அன்னை போல நாள்தோறும் சென்னையை பராமரிக்கும் தூய்மைப் பணியாளர்கள் - மெட்ரோ வாட்டர் பணியாளர்கள் என 2, 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட அனைவருக்கும் அன்பும் - வாழ்த்தும். எனப் பதிவிட்டுள்ளார்.
Tags :