அரசு பள்ளியில் மரம் விழுந்து 17 மாணவர்கள் காயம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மரம் விழுந்ததில் 17 மாணவர்கள் காயமடைந்தனர். மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தபோது வேரோடு மரம் சாய்ந்ததில் மாணவர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து மீட்கப்பட்ட அனைவரும்
சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :