ரூ. 1. 34 கோடி நில மோசடி- ஏமாற்றிய பெண் கைது

by Staff / 15-12-2023 04:42:53pm
ரூ. 1. 34 கோடி நில மோசடி- ஏமாற்றிய பெண் கைது

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி சின்னம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மங்கையர்க்கரசி (வயது 63). இவர்,  பருத்திப்பட்டில் உள்ள 36 சென்ட் நிலத்தை விற்க முடிவு செய்து, நில புரோக்கர் ஸ்ரீனிவாசன் வாயிலாக, சென்னை முகப்பேர் ஷமிலத் ஜமாலுதீன், 49 என்பவரிடம் 1. 5 கோடி ரூபாய் விலை பேசியுள்ளார்

.இந்நிலையில், ஷமிலத் ஜமாலுதீன் நிலத்தின் பெயரில் வங்கியில் கடன் பெற வேண்டும் என கூறி, மூன்று காசோலைகளை கொடுத்து மூதாட்டியை கையொப்பமிட கூறியுள்ளார்

.நிலத்திற்கான பணம் வங்கியில் தயாராக உள்ளதாக கூறி ,ஷமிலத் ஜமாலுதீன் தன் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டார். அந் நிலத்தின் மதிப்பு 1. 34 கோடி..மூதாட்டி,மங்கையர்க்கரசி காசோலையை வங்கியில் செலுத்திய போது கணக்கில் பணம் இல்லாமல் அது திரும்பி வந்தது..

இதனைத்தொடா்ந்து மூதாட்டிகாவல்துறையில் புகாா் அளிக்க,, இது குறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடியில் ஈடுபட்ட ஷமிலத் ஜமாலுதினை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via