மாணவிக்கு தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது

by Staff / 06-01-2024 11:49:44am
மாணவிக்கு தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது

புதுக்கோட்டை நகரில் உள்ள அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மனோகர் (36). இவர் மாணவி ஒருவரிடம் தகாத முறையில் பேசி பாலியல் தொல்லை அளித்ததாக, மாணவியின் தாயார் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ஆசிரியர் மனோகர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via