கட்சியிலிருந்து விலகிய அம்பத்தி ராயுடு

by Staff / 06-01-2024 12:58:50pm
கட்சியிலிருந்து விலகிய அம்பத்தி ராயுடு

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு அறிவித்த பின்னர். கடந்த டிசம்பர் 28ஆம் தேதி ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த சம்பவத்திற்கு ஆதரவும் விமர்சனங்களும் எழுந்தன. மேலும் குண்டூர் தொகுதியில் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கட்சியில் சேர்ந்த 9 நாட்களில் திடீரென அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். இது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via