தாலாட்டு பாடி கொலை செய்தேன்

by Staff / 13-01-2024 01:48:10pm
தாலாட்டு பாடி கொலை செய்தேன்

பெங்களூருவை சேர்ந்த 39 வயது பெண் தொழிலதிபர் சுசானா சேத் கோவாவில் தனது நான்கு வயது மகனை கொலை செய்து சூட்கேசில் வைத்து பெங்களூருக்கு எடுத்துச்சென்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலையை எப்படி செய்தார் என்பதை நடித்து காட்டிய சுசானா, குழந்தையை படுக்கவைத்து தாலாட்டு பாடிக்கொண்டே குழந்தையை கொலை செய்ததாக கூறியுள்ளார். விவகாரத்திற்கு பிறகு மனஉளைச்சலுக்கு அவர் ஆளாகியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via