தொகுதி பங்கீடு பொங்கலுக்கு பின்னர் முடிவு.

by Editor / 13-01-2024 11:07:31pm
 தொகுதி பங்கீடு பொங்கலுக்கு பின்னர் முடிவு.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர் காட்சிகள் இணைந்து இந்தியா (I.N.D.I.A) என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டணிக்கு தலைவராக மல்லிகார்ஜுனா கார்கே இன்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இன்று தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை காணொளி காட்சி மூலம் நடை பெற்றது. இதில் தமிழக முதல்வர் கலந்துகொண்டார். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என அந்த பேச்சுவார்த்தையில் முதலமைச்சரும்,திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவில் இந்த தேர்தலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் யார் யாருக்கு சீட் வழங்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Tags :  தொகுதி பங்கீடு பொங்கலுக்கு பின்னர் முடிவு.

Share via