மதுபானத்தில் ஊமத்தங்காய் சாறு கலந்தவர் கைது

by Staff / 14-01-2024 02:02:55pm
மதுபானத்தில் ஊமத்தங்காய் சாறு கலந்தவர் கைது

தர்மபுரி மாவட்டம் அரூர் சந்தைமேடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த வேடியப்பன் என்பவரை நிறுத்தி அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்தனர். அப்போது அதில் 40 மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றில் சில மது பாட்டில் களில் சீல் உடைக்கப்பட்டு இருந்தது. அவற்றை பரிசோதித்த போது அதிக போதைக்காக ஊமத்தங்காய் சாறு கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வேடியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via