தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

by Staff / 28-01-2024 03:21:52pm
தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இறந்தவர்கள் அஜய் குப்தா (35), அவரது மனைவி அனிதா குப்தா (34), மகன்கள் திவ்யான்ஷ் (9), தக்ஷ் (3) மற்றும் மகள் திவ்யான்ஷி (6) என அடையாளம் காணப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via