பாஜக ஆட்சியில் தினமும் 30 விவசாயிகள் தற்கொலை - ராகுல்

by Staff / 31-01-2024 01:39:53pm
பாஜக ஆட்சியில் தினமும் 30 விவசாயிகள் தற்கொலை - ராகுல்

பீகார் மாநிலம் பாட்னாவில் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தின் போது பேசிய ராகுல் காந்தி, பாஜக ஆட்சியில் தினமும் 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து விவசாயிகளின் கடன் 60% அதிகரித்துள்ள நிலையில், மோடி 10 ஆண்டுகளில் தொழிலதிபர்களின் ரூ. 7.5 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளின் பங்கான ரூ. 2700 கோடியை பிடித்தம் செய்து தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.40,000 கோடி லாபம் ஈட்டுகின்றன என்று சாடினார்.

 

Tags :

Share via