கள்ளக்காதலியை எரித்துக் கொலை செய்த வாலிபருக்கு வலைவீசு்சு

by Staff / 03-02-2024 05:53:51pm
கள்ளக்காதலியை எரித்துக் கொலை செய்த வாலிபருக்கு வலைவீசு்சு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மலையாளப்பட்டி கருமத்தான்காடு பகுதியில் நேற்று மதியம் சுமார் 1 மணி அளவில் பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கருகி கிடந்த பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரணையை முடுக்கி விட்டனர்.போலீசாரின் விசாரணையில் உடல் எரிந்து கிடந்த பெண் பெயர் சுகுணா (வயது 30), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சுகுணாவுக்கும், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த வல்லரசு (25) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு இவர்களது காதல் விவகாரம் சுகுணா கணவருக்கு தெரிய வரவே அவர் கண்டித்தார். இதனால் கணவரை பிரிந்து வல்லரசுவுடன் வந்தார்.இந்தநிலையில் வல்லரசு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமத்தான்காடு பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார். அங்கு ஆஸ்பெட்டாஸ் சீட்டால் வீடு அமைத்து தங்கி இருந்தார். அப்போது இருவரும் திருமணம் செய்யாமலேயே கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் முன்பு சுகுணா எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான வல்லரசுவை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via