திமுக தேர்தல் அறிக்கை குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் மதுரையில் வரும் 7 ம் தேதியன்று.

by Staff / 04-02-2024 04:44:11pm
திமுக தேர்தல் அறிக்கை குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் மதுரையில் வரும் 7 ம் தேதியன்று.

. தமிழ்நாடு முதலமைச்சரும்  தி.மு.க தலைவருமான மு. க. ஸ்டாலின்  அறிவுத்தலின்படி நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு வரும் 07.02,2924 -ம் தேதி, புதன்கிழமை காலை 9.00 மணியளவில் மதுரை மாவட்ட திமுக சார்பில் மதுரை   துவாரகா பேலஸ் மண்டபத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கைத் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது..இக்கூட்டத்தில் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை ச்சேர்ந்த தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் என அனைத்து த்தரப்பினரையும் நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை பெறவுள்ளனா்.. எனவே, இக்கூட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு மாவட்ட செயலாளர்,, அமைச்சர் பி. மூர்த்தி,,எம். எல். ஏ. கோ. தளபதி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via