ஓரினசேர்கைக்கு மறுப்பு.. துடிதுடிக்க சிறுவன் கொலை

by Staff / 14-02-2024 04:23:48pm
ஓரினசேர்கைக்கு மறுப்பு.. துடிதுடிக்க சிறுவன் கொலை

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் கடந்த ஜனவரி 15ஆம் தேதி காணாமல் போயுள்ளார். பின்னர் அங்குள்ள வாய்க்காலில் உடலில் காயங்களுடன் நிர்வாணமாக சிறுவன் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையயடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். பின்னர் சந்தேகத்தின் பேரில் அருள்ராஜ் என்பவரை பிடித்து விசாரித்ததில், செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தபோது, குளிக்க வந்த சிறுவனை அழைத்து படம் காட்டி ஓரின சேர்க்கைக்கு அழைத்தேன் சிறுவன் மறுப்பு தெரிவித்து தப்பியோடினான். இதனால் ஆத்திரமடைந்து அவனை மிதித்ததில் கீழே கிடந்த கம்பி கழுத்தில் குத்தியது. பின்னர் நீரில் அழுத்தி கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via