சிவகங்கையில் கொலைகாரன் கைது

by Staff / 27-02-2024 04:12:01pm
சிவகங்கையில்  கொலைகாரன் கைது

சிவகங்கை அருகே உள்ள மேலக்கூவானிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் என்கிற காளிமுத்தன். இவருக்கு திருமணமாகாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு கிராமத்திற்குள் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கீழக்கூவானிப்பட்டியில் மீனாட்சி என்பவரது பெட்டிக்கடை வாசலில் நடராஜன் உடலில் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.இதனை கண்ட அக்கிராம மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலண்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கொலை சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த லிங்கப்பாண்டி என்ற இளைஞன் இந்த கொடூர கொலையை செய்துள்ளதாக காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via