திருநெல்வேலி அல்வாவைப் போன்ற, இனிமையான மக்கள் - பிரதமர் பேச்சு
திருநெல்வேலி அல்வாவைப் போன்ற, இனிமையான உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பாளையங்கோட்டையில் பெல் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், ‘திருநெல்வேலி அல்வா' போன்று மிகவும் இனிமையாகவும், இளகிய மனதோடும்.இருப்பவர்கள் நெல்லை மக்கள். தமிழகத்தை சரியான பாதையில் பாஜக கொண்டு செல்லும். புதிய சிந்தனைகளுடன் இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 1 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். உலக நாடுகளுடன் இந்தியா போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வருகிறது. தமிழகத்தில் 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Tags :