படியில் தொங்கிய 4 கல்லூரி மாணவர்கள் பலி

by Staff / 12-03-2024 12:12:05pm
படியில் தொங்கிய 4 கல்லூரி மாணவர்கள் பலி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே திருநாவலூரில் பேருந்து படியில் தொங்கி கொண்டு வந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி பேருந்தும், கண்டெய்னர் லாரியும் உரசியதில் உடல் நசுங்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர். மாணவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில். 5 பேர் காயம் அடைந்தனர்.

 

Tags :

Share via