புனித யாத்திரையில் சாலை விபத்து - 14 பேர் உயிரிழப்பு

by Staff / 29-04-2024 03:45:07pm
புனித யாத்திரையில் சாலை விபத்து - 14 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு முக்கிய புனித தளங்களில் ஒன்றாக விளங்குகிறது தென்மேற்கில் உள்ள சல்மா கிறிஸ்தவ தேவாலயம். இந்த ஆலயத்திற்கு புனித யாத்திரையாக மத்திய மெக்சிகோ குவானாஜுவாடோ மாநிலத்தில் இருந்து அப்பகுதி மக்கள் பேருந்தில் புறப்பட்டனர். அந்த பேருந்தானது, கபூலின் – சல்மா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விபத்துக்குள்ளாகியது. இதில் சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 31 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via