11வது நாளாக விவசாய கூலி தொழிலாளர்கள் போராட்டம்

by Staff / 11-05-2024 12:39:14pm
11வது நாளாக விவசாய கூலி தொழிலாளர்கள் போராட்டம்

நாகை மாவட்டம் பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு இழப்பீடு வழங்க கோரி 11வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. மேலும் இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்தும் பணியை தொடரக்கூடாது என 50-க்கும் மேற்பட்டோர் வெள்ளப்பாக்கம் பகுதியில் ஜேசிபி வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.3 கிராம மக்களின் எதிர்ப்பை மீறி காவல்துறையின் பாதுகாப்புடன் நிலம் அளவிடும் பணி நடைபெற்று வந்த நிலையில் விவசாயித் கூலி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via