எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் இபிஎஸ்

by Staff / 14-05-2024 11:31:49am
எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் இபிஎஸ்

அவதூறு வழக்கு விசாரணைக்காக இன்று(மே 14) சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜராக உள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததை எதிர்த்து தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. உண்மைத் தன்மையை ஆராயாமல் எடப்பாடி பழனிசாமி பேசியது உண்மைக்கு புறம்பானது, எந்த ஆதாரங்களும் இன்றி தன் மீது அவதூறு பரப்பி உள்ளார் என தயாநிதிமாறன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

Tags :

Share via