இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

by Editor / 23-05-2024 09:43:28am
இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று (மே 22)நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (மே 23) அதிகாலை 5:30 மணி அளவில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை

Share via