ஆலை வெடி விபத்தில் 17 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தின் பெமேதரா மாவட்டத்தில் இன்று துப்பாக்கித் தூள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.வெடிமருந்து தொழிற்சாலை வெடிவிபத்தால், அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக 3 கிலோ மீட்டர் தூரம் வரை புகைமூட்டமாக மாறியுள்ளது.
Tags :