மோடி குமரி வருகை.தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது செல்வப்பெருந்தகை

by Editor / 29-05-2024 08:08:17am
மோடி குமரி வருகை.தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது செல்வப்பெருந்தகை

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜுன் 30ம் தேதி தமிழகம் வருகிறார். ஜுன் 30 முதல் ஜுன் 1 வரை அவர் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி இத்தகைய தியானம் மேற்கொள்வது என்பது தேர்தல் விதிமீறலாகும். இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:மே 30 முதல் ஜூன் 1 வரை பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது. வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால், நீதிமன்றத்தையும் அணுகுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

 

Tags : மோடி குமரி வருகை.

Share via