தாஜ்மஹாலில் சுற்றுலா பயணியை கடித்த நாய்
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் குரங்குகள் மற்றும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளை கடும் அவதி அடைந்து வருகின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரை தெருநாய் தாக்கியது. இச்சம்பவம் தாஜ்மஹாலின் கிழக்கு வாயிலில் வியாழக்கிழமை நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் அங்கிருந்து ஓட முயன்றபோது, நாய் அந்த நபரை துரத்திச் சென்று கடித்துள்ளது. உடனே அருகில் இருந்தவர்களை நாயை விரட்டி அவரை காப்பாற்றினர். நாய் தொல்லைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
Tags :