விக்கிரவாண்டியில் 2 தவணைகளாக பணம் விநியோகம்.

by Staff / 09-07-2024 12:29:27pm
விக்கிரவாண்டியில் 2 தவணைகளாக பணம் விநியோகம்.

விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாக பாமகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே வாக்காளர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் ரூ.1000 வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பனமலை, வெள்ளையம்பட்டு, ஏழுசெம்பொன் போன்ற பாமக வலுவாக இருக்கும் கிராமங்களில் பணம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. ஆனால் வாக்களர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என திமுக தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via