கடன் தொல்லை - குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த தொழிலாளி

by Staff / 11-07-2024 11:30:36am
கடன் தொல்லை - குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த தொழிலாளி


நெல்லை பணகுடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ரமேஷ் (41). வறுமை காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் கடன் வாங்கி அவருடைய மனைவி உமாவை வெளிநாட்டுக்கு வேலை அனுப்பி வைத்தார். ராபின் (14), காவியா (11) ஆகிய அவர்களது பிள்ளைகளை ரமேஷ் வளர்த்து வந்தார். இந்த நிலையில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால், ரமேஷ் தனது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via