திருப்பதி: அக்டோபர் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு

by Staff / 15-07-2024 04:12:26pm
திருப்பதி: அக்டோபர் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 18ம்தேதி காலை 10 மணி முதல் 20ம்தேதி காலை 10 மணி வரை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அன்று மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via