குடிபோதையில் தாறுமாறாக  கார் ஓட்டி விபத்து மூன்று பேர் படும் காயங்களுடன்மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 25-07-2024 09:50:06pm
குடிபோதையில் தாறுமாறாக  கார் ஓட்டி விபத்து மூன்று பேர் படும் காயங்களுடன்மருத்துவமனையில் அனுமதி.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்பட்டியார் பகுதியை சேர்ந்தவர் குரு சுப்பிரமணி (30)இவர் மற்றும் இவரது நண்பர் கசாசமியான் தெரு   பகுதியை சேர்ந்த சையத் அலி (30) ஆகிய இருவரும் திண்டிவனம் மேம்பாலம் மேல் பகுதியில் குடிபோதையில் .இருந்ததாக கூறப்படுகிறது குருமூர்த்தி இன்னோவா காரை திண்டிவனம் மேம்பாலம் மேல் பகுதியில் குடிபோதையில் தாறுமாறாக திண்டிவனம் மேம்பாலம் மேல்  மேல் பகுதியில் தனது காரை தாறுமாறாக ஓட்டி சென்றுள்ளாரர் திடீரென காரானது தாறுமாறாக மேம்பாலத்து மேல் ஓடியதில் இருசக்கரத்தில் வாகனத்தில் வந்த திண்டிவனம் ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பாபு மீது மோதியது அதே திசையில் இன்னொரு இரு சக்கர வாகனத்தில் வந்த சிங்கனூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் என்பவர் மீதும்மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் இருவரும் படும் காயங்கள் அடைந்தனர் மேலும் அந்த கார் ஆனது இரு சக்கர வாகனத்தின் மீது மோதி மேலும் எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது ஆட்டோவில் வந்த ஆட்டோ டிரைவர் முருங்கப்பாக்கத்தை சேர்ந்த சந்துரு (35) மீது மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தால் திண்டிவனம் மேம்பாலம் முழுவதும் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ பாகங்கள் சிதறி போர்க்களம் போல மாறியது.இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் குடிபோதையில் இருந்த காரில் வந்த கார் டிரைவர் குரு சுப்ரமணியன் மற்றும் அவருடன் உடன் வந்த சையது அலி  ஆகியோரை மீட்டு விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தில் இரு சக்கரம் வாகனம் முற்றிலும் நசுங்கி சேதம் அடைந்தது இரு சக்கரத்தில் வாகனத்தில் வந்த சந்துரு மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் முதல் உதவி சிகிச்சை திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : குடிபோதையில் தாறுமாறாக  கார் ஓட்டி விபத்து மூன்று பேர் படும் காயங்களுடன்மருத்துவமனையில் அனுமதி.

Share via