சிங்களக் கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்யுங்கள் அன்புமணி ராமதாஸ்
சிங்களக் கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்யுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இலங்கை கடற்படைக் கப்பல் மோதி படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த தமிழக மீனவர் மலைச்சாமி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படைக் கப்பல் மோதிய நிகழ்வை விபத்தாக பார்க்க முடியாது. அதை திட்டமிட்ட தாக்குதலாகவும், கொலையாகவும் தான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
Tags :