லாரி மீது ஆட்டோ மோதியதில் 7 பேர் பலி

by Staff / 20-08-2024 12:35:11pm
லாரி மீது ஆட்டோ மோதியதில் 7 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோ-ஜான்சி நெடுஞ்சாலையில் பாகேஷ்வர் நோக்கி ஆட்டோ ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் 13 பேர் பயணம் செய்தனர். அப்போது சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது ஆட்டோ பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 1 வயது குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via