செங்கோட்டை- மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
செங்கோட்டை- மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, கர்நாடகாவில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விடுமுறைதினத்தை முன்னிட்டு செப்டம்பர் 4, 5 மற்றும் 7 , 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மானாமதுரை-காரைக்குடி-பெங்களூரு வழியாக மைசூர் வரை செல்லும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் செப்டம்பர் 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து இரவு 9 .20 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பிற்பகல் 4.50 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : செங்கோட்டை- மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்