3 வயது சிறுமியை கொன்ற தாய்மாமன்

by Staff / 02-09-2024 05:14:35pm
3 வயது சிறுமியை கொன்ற தாய்மாமன்

மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஃபராஸ் என்ற அந்த இளைஞர் வேலை கிடைக்காததால் மிகுந்த மனஅழுத்ததில் இருந்துள்ளார். மேலும் அவரை, அவரது குடும்பத்தினர் வேலை இல்லாதவன் என கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தனது சகோதரியின் 3 வயது மகளின் தொண்டைக்குழியில் கத்தியால் குத்தி அச்சிறுமியை கொன்றுள்ளார். புகாரின் பேரில் ஃபராஸை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via