பள்ளிகளை திறக்க முடியாது.. அரசு அறிவிப்பு

by Editor / 16-08-2021 09:41:22am
பள்ளிகளை திறக்க முடியாது.. அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 கல்வி நிறுவனங்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து கருத்து கேட்ட பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். பள்ளிகளைப் பொருத்தமட்டில் அவசரமாக திறக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்

 

Tags :

Share via